நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்.

மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பட்ஜெட்டின் போது வெளியிட்டார்.

இதனையடுத்து, மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் இன்றும் நாளையும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அதில் தமிழகத்தில் 60,000 பேர் பங்கேற்கின்றனர்.

இதனால் நாடு முழுவதும் 88 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே