தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் எளிதாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இ பாஸ் பெறுவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. இ பாஸை முன்வைத்து முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதும் புகார்.
இதனால் இ பாஸ் பெறுவதில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.
விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன.
இ பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார், குடும்ப அட்டையுடன் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனே இ பாஸ் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.