சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்.25ல் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 45 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீசார் தமிழகம் வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அண்மையில் தமிழகம் வந்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர், நிர்வாக மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் தேவை குறித்து கேட்டறிந்தார்.

பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 25ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே