நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் அஸ்வின் அறிவித்துள்ளார்.

ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இக்கட்டான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நிலைமை சரியாகும் பட்சத்தில், மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் முடிவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே