அதிமுக தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஊழியா்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உயிரை பயணம் வைத்து கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் துய்மைப் பணியாளர்களை அரசு ஊக்குவித்து வருகிறது.
கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு முயற்சி மேற் கொண்டுள்ளது.
அதிமுக தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எங்களுடன் கூட்டணி வைக்க நினைப்பவர்களுடன் கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார்.