#GaneshChathurti :பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முறையீடு..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தடைக்கு எதிராக வழக்காக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில்,தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை எனவும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு வைத்திருந்தது விதித்திருந்தது.

இந்த நிலையில், தடையை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வழக்காக பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே