புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது.

கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் மே 10 (திங்கள்கிழமை) வரை ஊரடங்கு நீட்டித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே