பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாள் – முதல்வர், துணைமுதல்வர் அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தினர்.

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி. சம்பத், காமராஜ் வெல்லமண்டி நடராஜன் திண்டுக்கல் சீனிவாசன், துறை கண்ணன், தங்கமணி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, மா. பாண்டியராஜன். முன்னாள் எம்பி மைத்ரேயன், ஜெயவர்த்தன், தம்பிதுரை, மனோஜ் பாண்டியன்.

நடிகர் ரவிமரியா ஆகியோரும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாவின் கொள்கைகள், கோட்பாடுகளை அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் கடைப்பிடித்து புகழஞ்சலி செலுத்துவோம் எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே