கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ‘அஞ்சான்’ பட நடிகர் உயிரிழப்பு..!!

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிக்ரம்ஜீத், அதன்பிறகு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதில் ஆர்வம் செலுத்தினார்.

2003 முதல் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிக்ரம்ஜீத் – பேஜ் 3, பாப், கரம், கார்ப்பரேட், ஜோக்கர், ஹாரர் ஸ்டோரி போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். சமீபகாலமாக ஸ்பெஷல் ஓபிஎஸ் போன்ற இணையத் தொடர்களிலும் நடித்தார்.

தமிழில், சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் சமந்தாவின் தந்தையாக நடித்திருந்தார். ஏராளமான இந்தி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார் பிக்ரம்ஜீத். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பிக்ரம்ஜீத்தின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே