BIG NEWS : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் திருபாய் அம்பானி, அந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

அனில் அம்பானி மட்டுமல்லாமல் சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர், சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பணியாற்றி வந்த மணிகண்டனும் ராஜினாமா செய்திருந்தார்.

2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் 366 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நொடித்துத் தீர்க்கும் செயல்முறையில் உள்ள அந்நிறுவனம் செப்டம்பருடன் நிறைவான 2வது காலாண்டில் 30,158 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்தே அனில் அம்பானி உட்பட அந்நிறுவன இயக்குனர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே