பொது முடக்கம் காரணமாக வெளியூரில் இருக்கும் பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாமல் சீர்காழியில் வயதான தம்பதி தற்கொலை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீன்வியாபாரி அருள்சாமி-70 அவரது மனைவி பாக்கியவதி-65 தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏன்படுத்தியுள்ளது.

இவர்களது இரண்டு மகன்கள் திருமணமாகி சென்னையிலும் ஒரு மகள் திருமணமாகி வெளியூரிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளை சென்று பார்க்க முடியாமலும் அவர்களும் வந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனிமையில் வாழ்ந்த வயதான தம்பதியினர் மன உளைச்சலில் விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

தகவல் அறிந்த திருவெண்காடு போலிசார் தம்பதியர் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தாய்,தந்தை இறந்ததை அறிந்து வந்த மகன்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அதே மருத்துவமனையில் தனிமைபடுத்தினர்.

இதனால் இறந்தவர்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே