கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேலுக்கு சளி, காய்ச்சல் காரணமாக கொரோனா கண்டறியும் பரிசோதனை செய்ததில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 6ம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.