முடிவுக்கு வந்த முதல்வர் வேட்பாளர் விவகாரம்…! கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடா

சென்னை: அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் வர உள்ளது. ஆனால் அதிமுகவில் இப்போது யார் முதல்வர் என்ற பரபரப்பு கடந்த ஒரு வாரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இது அக்கட்சியில் பெரும் விவாதமாக மாறியது.

இந் நிலையில், துணை முதல்வர் இல்லத்திலும், முதலமைச்சர் இல்லத்திலும் அமைச்சர்கள் குழுவாக சென்று பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம் என்றும் இருவரும் கூறியுள்ளனர்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே