ஹஜ் பயணத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு

தமிழக ஹஜ் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 6,028 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்கு 3,736 இடங்கள் மட்டுமே தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 7 குழந்தைகள் உள்பட 6,028 பேர் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் மற்ற மாநிலங்கள் பயன்படுத்தப்படாத காலி இடங்களை தமிழகத்துக்கு ஒதுக்கி, விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே