நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், “நரகாசுரன்” என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.
சமீப காலமாக, கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, உங்களிடம் தைரியம் இருக்கும் போது, யாரும் உணர முடியாத சுதந்திரத்தை நீங்கள் உணருவீர்கள். சரியானவர்கள் உங்களின் அழகான மற்றும் ஆக்கப்பூர்வமான ஆத்மாவை உண்மையாக நேசிப்பார்கள் . நம்பகத்தன்மையான மற்றும் வெளிப்படையாக ஒரு முடிவை எடுங்கள். ஆம், உங்களை நம்புங்கள். நீங்கள் நீங்ககளாக இருப்பது தான் சுதந்திரம் என்று கூறியுள்ளார்.