கொரோனாவை ஒழிக்க களமிறங்கிய நடிகர் விமல் திருச்சி அருகே தனது சொந்த கிராமத்தில் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடும்பத்தினருடன் நடிகர் விமல் தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டார்.
எனினும், தனது சொந்த கிராமமான பன்னாங்கொம்பு பகுதியில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.
அப்போது ஊராட்சி நிர்வாகம் மூலம் தெளிக்கப்பட்டு வரும் கிருமி நாசினி கருவியை நடிகர் விமல் வாங்கிகொண்டு பன்னாங்கொம்பு கிராம வீதிகளில் சென்று தானே கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டார்.
திரை நட்சத்திரம் கிராமப்புறத்தில் தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.