கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு , கடந்த 20 – ம் தேதி ரஜினி தனது காரை தானே ஓட்டி சென்றது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வைரலானது.
இந்நிலையில் அவர் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது.
ரஜினி இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி. இதற்காக முறையாக அவர் இ-பாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸ் அவர் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ரஜினி தனது சொகுசு காரில் மாஸ்க் அணிந்து சென்றாலும் கூட அவர் சீட் பெல்ட் அணியாததற்காக தற்போது அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 – ம் தேதி அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் வெளியான நிலையில் , தாழம்பூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் காவல் துறையினரை பாராட்டி வருகின்றனர்.