திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது காணொலி காட்சி வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரின் போடப்படும் பொய் வழக்குகள், கைது நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்க்கொள்வது குறித்து இன்று இந்த ஆலோசனைக்கூட்டமானது தொடங்கி இருக்கிறது.

ஆலந்தூரில் நேற்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர்மீது சாடப்பட்ட இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டார். 

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத வழக்குகள், கைது நடவடிக்கைகள் முதலியவற்றை தவிர்ப்பது குறித்து இந்த ஆலோசனைக்கூட்டமானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே