BREAKING | இந்தியாவில் முதல் பலி : கொரோனா வைரஸ் தாக்கி முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலியாக இது கருதப்படுகிறது.

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 62 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதித்த முதியவர் கர்நாடகாவில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே