மனைவியை கொன்று மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது புதுக்கோட்டை நீதிமன்றம்.
புதுக்கோட்டை அருகே தென்திரையான்பட்டியைச் சேர்ந்த முருகேசன் 2019ஆம் ஆண்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு தரவும் மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.