ஒருநாள் கிரிக்கெட்: யார்க்கர் நடராஜன், சூரியகுமார் யாதவ், குருணால் பாண்டியா, ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு – இந்திய அணி அறிவிப்பு

ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், பிரசீத் கிருஷ்ணா ஆகியோரும் உள்ளனர், உமேஷ் யாதவ், சைனிக்கு இடமில்லை, ஸ்பின்னர்களில் சாஹல், குல்தீப் உள்ளனர், வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான பேடிஎம் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டி20 கிரிக்கெட்டில் காயத்தினால் ஆட முடியாமல் போன தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல் பேட்டிங்கில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார், ஆனால் ஷிகர் தவான் ஏன் அணியில் இடம்பெற்றார் என்பது புரியாத புதிர். ஆனால் நேற்று டி20-யில் கலக்கிய சூரியகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பளித்து பிரமாதமான முடிவை அணித்தேர்வுக்குழுவினர் எடுத்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், பிரசீத் கிருஷ்ணா ஆகியோரும் உள்ளனர், உமேஷ் யாதவ், சைனிக்கு இடமில்லை, ஸ்பின்னர்களில் சாஹல், குல்தீப் உள்ளனர், வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார்கள்.

புனேயில் மார்ச் 23, 26, 28 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கு ரசிகர்களுக்கு நேரடி அனுமதி கிடையாது. காலி ஸ்டேடியத்தில்தான் நடக்கும்.

இந்திய அணி வருமாறு:

விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே