கிருஷ்ணகிரி ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 12ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நீர் திறப்பால் ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் எனக் கூறியுள்ளார்.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற கேட்டுக் கொள்கிறேன் என தறிவித்துள்ளார்.