உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.
இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது என்பதால் பங்களாவை ஜூலை 31க்குள் காலி செய்யுமாறும்; வாடகை நிலுவையை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை பிரியங்கா காந்தி லோதி எஸ்டேட் இல்லத்தை காலி செய்து வீட்டின் சாவியை மத்திய பொது பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரம், தண்ணீர் மற்றும் அனைத்து நிலுவைத்தொகைகளும் பிரியங்கா காந்தி செலுத்தி விட்டார்.
டெல்லியில் நிரந்தர குடியிருப்பு தயாராகும் வரை, தற்போது தற்காலிக குடியிருப்பில் பிரியங்கா காந்தி குடியிருக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.