அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்துள்ளார்.
மேலும், வருகின்ற 27-ம் தேதி 12-ஆம் வகுப்பு மறுதேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்தமாத முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.