இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியது!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 38,902 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 28,732 -ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 37,724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது;

அதே கால அளவில் 648 பேர் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 28,732 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 4,11,133 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,53,050 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 3,27,031 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12,276 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,80,643 பேருக்கும், தலைநகர் தில்லியில் 1,25,096 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 58,668 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும், தெலங்கானாவில் 47,705 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 21- ஆம் தேதி வரை 1,47,24, 546 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் திங்கள்கிழமை மட்டும் 3,43,243 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிப்பு: 11,92,915
பலி: 28,732
குணமடைந்தோர்: 7,53,050
சிகிச்சை பெற்று வருவோா்: 4,11,133

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே