#BREAKING : சாத்தான்குளம் கொலை வழக்கு : 5 காவலர்களை நாளை ஆஜர்படுத்த உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான 5 போலீஸாரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீஸார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நீதிமன்றத்தின் அறிவுரைப்படி சிபிசிஐடி சில நாள்கள் இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், தற்போது சிபிஐ இவ்வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

அதன்படி, இந்த வழக்கில் கைதான 5 போலீஸாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணையில், வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், அவர்கள் ஐவரையும் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே