ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.
மேலும், கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே இந்த சந்திப்பு இன்று மாலை நிகழ உள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை 4-வது முறையாக முதல்வர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.