தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,562 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இன்று ஒரேநாளில் 528 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..!
தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 286 பேர் உயிரிழப்பு..!
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டும் 1,149 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.