ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என்று ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்த இவர் காமராசர் அழைப்பை ஏற்று காங்கிரசில் இணைந்தார்.
இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்திய இம்மானுவேல் சேகரன் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 123 டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.