அனைத்து அதிமுக ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊராட்சி செயலாளர்களாகப் பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.