காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விளைவுகளால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது பாஜக அரசுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அசோசாம் அமைப்பு தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பொருளாதார கட்டமைப்பில் ஒரு ஒழுங்கினை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் தொழில்துறையினரின் கோரிக்கைகளை பாஜக அரசுதான் நிறைவேற்றியதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 13 வங்கிகள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.