நடுரோட்டில் வயிற்று பிழைப்புக்காக கம்பு சுத்தும் 75 வயது மூதாட்டி திறமைக்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் புனேவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம்.
அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம்.
இந்நிலையில், வயதான மூதாட்டி ஒருவர் தன் வீர சாகச கலைகளை காட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா காலேவால் பகிரப்பட்டது.
இதனை நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் புனே கமிஷனர் டாக்டர் வெங்கடேசம் ஆகியோரும் பகிர்ந்தனர்.
இதுகுறித்து ஏ .என் .ஐ செய்திக்கு அவர் அளித்த தகவலில்,
நான் 8 வயதிலிருந்தே அதைச் செய்கிறேன். என் தந்தை எனக்கு கடினமாக உழைக்கக் கற்றுக் கொடுத்தார்.
#COVID19 காரணமாக மக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள், எனவே நான் நிகழ்த்தும்போது அவர்களை எச்சரிக்க நான் பாத்திரத்தை இறுகப் பற்றிக் கொள்கிறேன்.
“கடவுளின் கிருபையால், இந்த வயதில் என்னால் செயல்பட முடிகிறது, என் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
என் பேரக்குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர்கிறார்கள், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.”என்று அவர் கூறியுள்ளார்.