சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்..!!

அதிமுக சசிகலாவுக்கு கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 6 நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதில், தட்சிணா மூர்த்தி என்பவர் சசிகலா சென்னை வர கார் கொடுத்தவர்.

இன்று காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்ட சசிகலா தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார்.

அப்போது காரில் அதிமுக கொடியை அகற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. 

இதனால் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் மாநில எல்லைக்குள் வந்து, அந்த காரில் சென்னை புறப்பட்டார்.

இந்த கார் யாருடையது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே