உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
ஐந்து பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என முஜீப் பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது.
இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2019/10/5-paisa-persons.png?resize=800%2C450&ssl=1)
எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
பழைய நாணயங்களின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவும், பழைய நாணயங்களை சேகரிப்பதற்காகவும் இந்த அறிவிப்பை விடுத்ததாக பிரியாணி கடை உரிமையாளர் ஷேக் முஜீபுர் தெரிவித்தார்.