ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் – தமிழகம் வலியுறுத்தல்

ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.

மாதத்திற்கு ஒருமுறை காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று காணொலி காட்சி மூலமாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடைபெற்றது .

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30ஆவது கூட்டத்தில் தமிழகம் சார்பில், ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே