கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் 4,244 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,244 பேர்களில் 1,168 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது.

சமீப நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 

ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என சந்தேகம் இருந்து வந்தது.

ஆனால் தற்போது அமைச்சர் ஜெயகுமார், கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு குறைய ஆறு மாதமும் ஆகலாம் ஒரு வருடமும் ஆகலாம் அதுவரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே