இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.52 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக 2,812 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 272 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 43 லட்சத்து 4 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆக உள்ளது.

இதுவரை 14,19,11,223 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே