2 லாரிகள் நேருக்கு நேர் மோதல் – 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புலர் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி, தண்டவாளத்தில் தூங்கிய புலம் பெயர் தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், நேற்று மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில், 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில், ராஜஸ்தானில் இருந்து பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே