சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஜூன் 30-வரை நீட்டித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 என உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சென்னையில் தீவிரமாக கொரோனா பரவிவருவதை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் 144 உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே