போதைப்பொருள் கடத்திய பணத்தில்தான் திமுக தேர்தல் செலவு..?? – இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

போதை பொருள் விற்பனை தொடர்பான பணத்தில் தான் திமுக நாடாளுமன்ற தேர்தல் செலவினை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்என் ரவியை அதிமுக., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார்.
கவர்னரை சந்தித்த பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளோம். தி.மு.க., போதைப்பொருள் விற்பனை செய்து கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட உள்ளது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மடியில் கனம் இருப்பதால் தி.மு.க.,விற்கு பயம்.

போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது, இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்.

ஒரு துளி போதைப்பொருள் கூட தமிழகத்தில் விற்பனை செய்யாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே