ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு

வேலூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி பல்வேறு திட்டங்கள் குறித்து துறைவாரியாக விளக்கங்கள் கேட்கப்பட்டன.

முன்னதாக வேலூரில் நடைபெற்ற பல்வேறு அரசு திட்டப்பணிகளை துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக காட்பாடி காந்திநகரில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி, சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

குழு கூட்ட நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கையின்படி துறைவாரியாக விளக்கங்கள் கோரப்பட்டதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே