முகினை குறிவைத்து பேசும் மீரா மிதுன் – பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் – இன் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உள்ள ஆடியோ மீராமிதுன் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்து கொண்டவர் மீராமிதுன். சக போட்டியாளர்களுடன் அவர் நடந்து கொண்ட விதம் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியான அவரது மிரட்டல் ஆடியோக்கள் இன்னும் அதிகமாய்ப் பேசப்பட்டன.

குறிப்பாக மாடலிங்கில் இருந்தது முதல் தனக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறிய ஜோ மைக்கேல் என்பவரை “ஆளை வச்சு தூக்கு” என மீராமிதுன் பேசியது திடுக்கிட வைத்தது.

மீராமிதுன் ஜூலை 27 ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவதாக அறிவிக்கப் பட்டார்.

அதன்பிறகு போட்டோஷூட், திரைப்பட வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் மீராமிதுன் பேசும்படியான ஆடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அது, தான் பிக் பாஸ் போட்டியாளர் முகினுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் எனவும், வேலை முடிந்ததும் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் பேசும் வகையில் அந்த ஆடியோ அமைந்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், முகின்தான் வெற்றியாளர் ஆவார் எனும் யூகங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

அப்படி இருக்கும்போது மீரா ஏன் அவருடன் இருக்கும் வீடியோக்களை பரப்ப சொல்கிறார்?? முகினின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா?? எனும் வகையிலான கருத்துக்களும் அந்த ஆடியோவின் அடிப்படையில் பரவத் தொடங்கி இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே