மகராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் பிறமாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய தேர்தல் குழு இன்று மாலை கூடியது.

ஆலோனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனையில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் வியூகங்கள் மற்றும் இரண்டு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தல் வாக்குறுதிகள் பற்றி எல்லாம் விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.

முன்னதாக ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே