பான் கார்டுடன் ஆதாரை இணைக்க 2 நாட்களே அவகாசம்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, நாளை மறுநாள் முடிவடைகிறது.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை அழைக்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. ஏற்கனவே பலமுறை நீடிக்கப்பட்ட நிலையில் கூடுதல் அவகாசம் தரப்படாது என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே நாளை மறுநாளைக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் புதிதாக பான் கார்ட் விண்ணப்பித்து பெற நேரிடும் நிலையில் ஆதார் எண் அப்போது விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டியிருக்கும்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எளிது. வருமான வரி துறை இணையதளத்தில் லின்க் ஆதார் என்ற பிரிவில் சென்று பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் பதிவிட்டால் சில நிமிடங்களில் பணி முடிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே