பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பகுத்தறிவு பகலவன் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அவரைப் போற்றுகிறது. 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே