தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

தீபாவளியையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீமையை நன்மையும், இருளை ஒளியும் வெற்றி கொள்ளும் நாள் தீபாவளி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிப்பதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். தீபாவளித் திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டு வரட்டும் என வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள செய்தியில், கடவுள் நமது பாதைகளை ஒளிரச் செய்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவார் எனக் குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தி விடுத்துள்ள செய்தியில்,தீபாவளித் திருநாள் பாகுபாடின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே