மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்டுள்ளார்.
நாகமலை புதுக்கோட்டையில் கே.எம்.ஆர் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு மாணவர்களின் திறமைகளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் இறுதியாக மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு அடிப்படையில் ஸ்ருதிகா என்ற 8ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் ஒரு நாள் முழுவதும் பள்ளியின் தலைமை ஆசிரியையாக செயல்பட்டார்.
இதன் மூலம் தலைமைத்துவமாக செயல்படுவது, சவாலான சூழலை எதிர்கொள்வது போன்ற திறன் பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்படுகிறது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.