இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்ரவண்டி தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் சரிபார்ப்புப் திட்டத்தில் இதுவரை 23 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர் மற்றும் முகவரியை சரி பார்த்ததாகவும், செல்போன் செயலி மூலம் மட்டும் 9 லட்சம் பேரும், சேவை மையம் மூலம் 12 லட்சத்து 85 ஆயிரம் பேரும் பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே