இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தேதி அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் அ.தி.மு.க. தலைமையகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் தலைமையகத்தில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே