பொது இடங்களில் ஆக்கிரமிப்புக்களை நீக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? – நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் அகற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி முன்வைத்திருக்கிறது.

சாலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கவும், வழக்கில் எதிர் மனுதரார்களாக வக்பு வாரியம் மற்றும் பேராயங்களின் அமைப்புகளை சேர்க்கவும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே